Saturday, August 5, 2017

ஆசிரியா் நூலகம் -61 தெருவிளக்கும் மரத்தடியும்


தெருவிளக்கும் மரத்தடியும்
.மாடசாமி
புதிய தலைமுறை வெளியீடு.

நமது பாடத்திட்டத்தை மாற்றவேண்டும் நாடு முழுதும் ஒரே பாடத்திட்டத்தை
அறிமுகப்படுத்தவேண்டும் என்ற குரல்கள் ஒலித்தபடி உள்ளன.
அதற்கு முன்னதாக நமது ஆசிரியர் கல்விமுறையை (Teacher Education) மாற்றவேண்டும்.

எந்த பாடதிட்டமாக இருந்தாலும் தற்போதைய வகுப்பறைகள் தேர்வுகளுக்கான பயிற்சிக் களங்களாக மட்டுமே இருக்கும்.
எனவே ஆசிரியர் பயிற்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதன் விளைவாக வகுப்பறைகளை உயிரோட்டமுள்ளதாக்கலாம்.
அப்படி அமையப்போகும் ஆசிரியர் பயிற்சிக்கு கல்வியாளர் .மாடசாமி
அவர்களின் நூல்களை பாடமாக வைக்கவேண்டும்.

தெருவிளக்கும் மரத்தடியும் அவரது 17 கட்டுரைகள் அடங்கிய
புதிய தொகுப்பு.

மெல்லிய நகைச்சுவை,குட்டிக்கதைகளோடு
அவர் எழுத்துக்கள் நமது வகுப்பறைகளின் போதாமையை சுட்டிக்காட்டுவன.
நீண்ட அனுபவத்தில் அவரது ஓயாத தேடலும், களப்பணியும்,கல்வி குறித்த தொடர் சிந்தனைகளும்,படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் அடங்கிய நம்மை சிந்திக்கத்தூண்டும் புத்தகம்.



No comments:

Post a Comment