.ஆளுக்கொரு கிணறு
ச. மாடசாமி
அருவி மாலை பதிப்பகம்.மொழி, பண்பாடு, மற்றும் கல்வி பற்றி ச. மாடசாமி எழுதிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இது.
சுவாரஸ்யமான கள அனுபவக் குறிப்புகள்,பழமொழிகள்,சொலவடைகளுடன் மென்மையான எள்ளலுடன்கூடிய கட்டுரைகள்.
கல்வி முறை எப்படி இருக்க வேண்டும்?
"ஆசிரியர்களையே எதிர்பார்த்து, எதிர்பார்த்து மாணவர்கள் கல்வியைத் தொடரப் பழக்கியாயிற்று.
கல்வி என்பது மாணவனிடமிருந்து தொடங்குகிறது ஆசிரியரிடம் இருந்து அல்ல. மாணவர்களுக்கு கற்பிப்பதை விட அவர்கள் தங்களைத் தானே கண்டு கொள்ள உதவுவது தான் ஆசிரியரின் முதன்மையான பணி" என்கிறார் மாடசாமி.
தற்கால கல்வி முறையில் உள்ள குறைகளையும் தீர்வுகளையும் விளக்குவதோடு கனமான விஷயங்களையும் எளிய நடையில்எழுதப்பட்ட முக்கிய நூல்.
No comments:
Post a Comment