Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் -6. நள்ளிரவில் சுதந்திரம்

நள்ளிரவில் சுதந்திரம்
டொமினிக் லேப்பியர்   லேரி காலின்ஸ்
தமிழில்: வி.என்.ராகவன்          மயிலை பாலு           
 அலைகள் வெளியீட்டகம்.
 
 

                       "Freedom at Midnight" என்ற முக்கியமான ஆங்கில நூலின் தமிழாக்கம்.
இந்திய சுதந்திர வரலாறு வினோதமானது.இங்கே சுதந்திரத்துக்காக சிந்தப்பட்ட இரத்தத்தைவிட பிரிவினைக்காக சிந்தப்பட்ட இரத்தமும், கொல்லப்பட்ட உயிர்களும், இழந்த உடைமைகளும் ,மக்களின் துயரமும் கணக்கிலடங்காதவை.

நாமறிந்த பொதுவான வரலாற்றிலிருந்து மாறுபட்டு
இந்நூலிலுள்ள தகவல்கள் நமக்கு மிகுந்த வியப்பையும் அதிர்சியையும் தருகிறது.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க அனுப்பப்பட்ட மௌண்ட்பேட்டன், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, பற்றியெரியும் பிரிவினைத்தீயை தமது அகிம்சையால் அணைத்த காந்தி, காஷ்மீர் பிரச்சனை, இந்திய மன்னர்கள் சமஸ்தானங்களின் களியாட்டங்கள் இவற்றை ஆதாரங்களோடு மிக சுவாரசியமான நடையில் விவரிக்கும் முதன்மையான ஆவணம்

காந்திஜியின் போராட்ட வடிவமானஅகிம்சைதத்துவத்தை புரிந்துகொள்ள உதவும் இந்த நூல் 1975ல் வெளிவந்தவுடனேயே உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்தது, ஆனால் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது

இந்தியர் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.இப்புத்தகம் இன்றி உங்கள் நூலகம் முழுமை பெறாது.

1 comment:

  1. உனது பரிந்துரைகளில் பொக்கிசமாக கருதும் நூல் இது.வரலாற்றின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திய இது நன்றிகள் பல

    ReplyDelete